Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன வந்துகிட்டே இருக்காய்ங்க! ரெடி மிக்ஸ் வண்டியில் எஸ்கேப் ஆன தொழிலாளர்கள் #WebViral

Webdunia
சனி, 2 மே 2020 (15:53 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நூதனமான முறையில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அனுமதித்தால் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிமாநில ஊழியர்கள் பலரும் நடந்து செல்வது, சைக்கிளில் செல்வது என பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் சென்ற கான்கிரீட் சிமெண்ட் கலவை கொண்டு செல்லும் வாகனத்தை போலீஸார் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் சிமெண்ட் மிக்ஸிங் டேங்கிற்குள் 18 நபர்கள் மறைமுகமாக பதுங்கி சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவிற்கு இவ்வாறாக மறைந்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ட்ரக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிமெண்ட் கலவை டேங்கிற்குள்ளிருந்து வரிசையாக தொழிலாளிகள் இறங்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments