Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து..!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (09:54 IST)
நாளை திருப்பதி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய இருக்கும் நிலையில் நாளைய தினத்தின் விஐபி டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.  அவருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து திருப்பதி முழுவதும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை தரிசனம் செய்ய இருப்பதால் அனைத்து விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிற வகை தரிசனமும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளன.

ஐந்து மாநில தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த தேர்தலில் வெற்றி பெறவும், விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவும் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments