Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (14:56 IST)
அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார்!
அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க இருப்பதாகவும் பிரதமர் மோடி இந்த சேவையை தொடக்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஏலம் சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த இடத்தில் ரிலையன்ஸ், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கலந்து கொண்டன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தீபாவளி முதல்  5ஜி சேவையை தொடங்க இருப்பதாக ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி தெரிவித்த நிலையில் தற்போது அக்டோபர் 1ம் தேதி சேவை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
 
அக்டோபர் ஒன்றாம் தேதி டெல்லியில் இந்தியா மொபைல் காங்கிரஸ் என்ற மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அன்றைய தினம் 5ஜி சேவையை தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டால் மிகப்பெரிய தொலைத்தொடர்பு புரட்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments