Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார்! – பிரதமர் மோடி உறுதி!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:43 IST)
நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது முதலாக நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிஜிட்டல் கரன்சியை கட்டுப்படுத்தும் புதிய சட்ட மசோதா உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி “நடைபெற உள்ள கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார். எதிர்கட்சிகளின் கேள்விக்கு உரிய பதில் அளிக்க தயாராக உள்ளேன். அனைவரும் அமைதியான முறையில் கூட்டத்தொடர் நடைபெற ஒத்துழைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments