Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவின் குறிக்கோள் புதிய பஞ்சாப்! – காணொலியில் பேசிய பிரதமர்!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (08:27 IST)
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காணொலி மூலமாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி புதிய பஞ்சாபை உருவாக்குவதே நோக்கம் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சாபில் பாஜக வெற்றியை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறது.

முன்னதாக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் காரை போராட்டக்காரர்கள் வழிமறித்த சம்பவத்திற்கு பிறகு பிரதமர் தற்போது நேரில் செல்லாமல் காணொலி மூலம் பஞ்சாபில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் “புதிய பஞ்சாப்பை உருவாக்குவதே பா.ஜ.க.வின் குறிக்கோள். எங்களிடம் தொலைநோக்கு பார்வையும் பணியின் சாதனையும் உள்ளது. கர்தார்பூர் சாஹிப்பை காங்கிரசால் இந்தியாவில் வைத்திருக்க முடியவில்லை. ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக சிலர் பஞ்சாபை பயங்கரவாத தீயில் எரிய விடுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments