Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (14:13 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி போலவே தோற்றம் கொண்ட நபர் களமிறங்கியுள்ளது வைரலாகியுள்ளது.

பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை பீகாரில் யார் ஆட்சி அமையும் என்று மக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலில் மோடி போலவே உள்ள ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

ஹம்ஷகல் அபிநந்தன் என்ற அந்த நபர் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஹதுவா பகுதியை சேர்ந்தவர். தற்போது அவர் ஹதுவா பகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தனது பிரச்சாரத்தில் மோடி ஸ்டைலிலேயே பேசி வருகிறாராம். முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார் இந்த அபிநந்தன்.

இந்த முறையும் சுயேட்சையாக போட்டியிடும் இவர் வெற்றிபெற்று முதல் சுயேட்சை முதல்வராகவும் திட்டமிட்டு வருகிறாராம். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments