Publish Date: Mon, 07 Feb 2022 (20:11 IST)
Updated Date: Mon, 07 Feb 2022 (20:12 IST)
வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக பிளஸ்டூ மாணவர் வாக்குமூலம் அளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மேகாலயா மாநிலத்தில் பிளஸ் 2மாணவர் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட அந்த மாணவரிடம் விசாரித்தபோது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்றும் பல வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்ததை அடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்
அந்த மாணவன் கொடுத்த வாக்குமூலத்தில் ஷில்லாங் உள்பட பல பகுதிகளில் தனிநபராக வெடிகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டதாகவும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சக்தி வாய்ந்த வெடிகுண்டை நான்தான் வெடிக்க செய்தேன் என்றும் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
இதனை அடுத்து அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க தீவிரமாக போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.