Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் ஏவுகணை! – முதல் சோதனையிலேயே வெற்றி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (12:59 IST)
அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் ”பிரலே” ஏவுகணை முதல் சோதனையிலேயே வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் ராணுவ பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சமீப ஆண்டுகளாக இந்தியாவிலேயே முழுவதும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டும் வருகின்றன. முன்னதாக பிரமோத், ப்ரித்வி, அக்னி போன்ற ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன.

அதை தொடர்ந்து தற்போது அணு ஆயுதம் தாங்கி செல்லும் “பிரலே” ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அப்துல்கலாம் தீவிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 டன் அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய இந்த ஏவுகணை 500 கி.மீ தூரம் பயணிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments