அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக்கொண்டு இருந்த நபர் பேருந்தில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்!

J.Durai
திங்கள், 15 ஜூலை 2024 (16:48 IST)
கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எம் எஸ் எம் என்ற தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.
 
காரமடை அருகே வந்த பேருந்து அதி வேகமாக வந்த சூழலில் காரமடை அடுத்த ரவி ராம் திருமண மண்டபம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகத்தில் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி அதில் இருந்து அங்கிருந்த மளிகை கடைக்கு முட்டை ஏற்றிக் கொண்டிருந்த ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபர் என இருவர் பலத்த காயமடைந்தனர்.
 
அதில் முட்டை ஏற்றிக் கொண்டிருந்த முருகன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தொடர்ந்து படுகாயம் அடைந்த நபர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பேருந்தின் ஓட்டுநரை பிடித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்