குடிநீருக்கு பதில் ஆசிட் கொடுத்த மருத்துவமனை ஊழியர்

Webdunia
சனி, 17 பிப்ரவரி 2018 (16:56 IST)
பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியர் ஒருவர் நோயாளிக்கு மாத்திரை சாப்பிட குடிநீருக்கு பதில் ஆசிட் கொடுத்ததால் அந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

 
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள கோருல் கிராமத்தைச் சேர்ந்த சியாமளி தேவி என்பவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் கண் அறுவை கிசிக்கை செய்துக்கொண்டார். கடந்த புதன்கிழமை தேவி மாத்திரை சாப்பிட மருத்துவமனை பணியாளரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.
 
அந்த மருத்துவமனை பணியாளர் தண்ணீர் என நினைத்து ஆசிட் பாட்டிலை கொடுத்துள்ளார். வாயில் மாத்திரையை போட்டு தேவியும் ஆசிட்டை குடித்துள்ளார். இதானால் துடித்து போன தேவிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments