Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து 4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்.. தொடங்கிய சில நிமிடங்களில் ஒத்திவைப்பு..!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (12:35 IST)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் 3 நாட்களிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்களின் அமளிதுமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக பாராளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்பிகளும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் பணிகள் பாதிக்கப்பட்டு கோஷம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக நாடாளுமன்றம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்பிகளும், அதானி குழும விவகாரம் குறித்து குழு அமைக்க வேண்டும் என எதிர்கட்சி எம்பிகளும், போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments