இந்தியா - பாகிஸ்தான் போரை அமெரிக்கா நிறுத்தவில்லை: உண்மையை உளறிய பாகிஸ்தான் அமைச்சர்..!

Siva
புதன், 17 செப்டம்பர் 2025 (17:15 IST)
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதில் அமெரிக்காவிற்கு எந்தப் பங்கும் இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். இதன் மூலம், போரை நிறுத்தியது நான் தான் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பலமுறை கூறியதை, முதல் முறையாகப் பாகிஸ்தானே மறுத்துள்ளது.
 
செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் தார், “மே 11 அன்று அமெரிக்காவிலிருந்து போர் நிறுத்தம் குறித்த தகவல் எனக்கு வந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு பொதுவான இடத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா அமெரிக்காவிடம் தெரிவித்ததாக நாங்கள் அறிந்தோம். அதன் பிறகு, அமெரிக்கா இதில் தலையிடவில்லை” என்று கூறினார்.
 
இந்தியா, எந்தவொரு மூன்றாவது தரப்பின் தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரிப்பது அதன் நிலைப்பாடு என்றும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் இப்போதும் தயாராக இருப்பதாகவும் இஷாக் தார் கூறினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments