Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுமையாக உழைத்தும் பலன் கிடைக்கவில்லை! – ஓவைசி ஆதங்கம்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (08:36 IST)
உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வென்றுள்ள நிலையில் தோல்வி குறித்து அசாசுதீன் ஓவைசி பேசியுள்ளார்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 273 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு பெரும் போட்டியாக விளங்கிய சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களை கைப்பற்றியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்முறையாக தேர்தலில் களம் இறங்கிய அசாசுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஒரு சதவீத வாக்குகளை கூட பெறாமல் தோல்வியை தழுவியது. இதுகுறித்து பேசியுள்ள ஓவைசி “உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. உத்தர பிரதேச மக்கள் பாஜகவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்கள் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிடிவி தினகரனுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்ற ஈபிஎஸ்.. கூட்டணியில் இணைகிறாரா?

தாம்பரம் - கிளாம்பாக்கம் புதிய வழித்தடம்.. புதிய பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

இந்தியாவில் முதல்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம்.. பயணிகள் வரவேற்பு..!

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments