Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஒரே நாடு, ஒரே மின் திட்டம்”: மலிவு விலையில் மின்சாரம் சாத்தியம்!!

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (10:32 IST)
’ஒரே நாடு, ஒரே மின் திட்டம்’ நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என பட்ஜெட் தாக்கலில் இடம்பெற்றிருப்பதால், மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு திட்டம் அமலாக்கப்படும் என அறிவித்தார்.

இது பற்றிய அறிவிப்பில், மின் இணைப்பை ஒரே நாடு, ஒரே மிந்தொகுப்பு என உருவாக்க உள்ளதாகவும், மேலும் இந்த திட்டத்தால் மலிவு விலையில் மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்கிறதென்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் அவர், கியாஸ் மின் தொகுப்பு, நீர் மின் தொகுப்பு, மின்னணு பாதை உள்ளிட்ட திட்டங்களை இந்த ஆண்டு தயாரிக்க உள்ளதாகவும் கூறினார்.

தற்போது தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்குள் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும், 101 யூனிட்டிலிருந்து மின் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் 2017 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments