Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு 8 மணிக்கு மேல் மதுவிற்பனை கிடையாது! முதல்வர் அதிரடியால் குடிமகன்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (06:46 IST)
இரவு 10 மணி வரை மதுவிற்பனை நடப்பதால் நள்ளிரவு வரை குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக புகார்கள் அதிகம் வந்த நிலையில் இனி இரவு 8 மணிக்கு மேல் மதுவிற்பனை கிடையாது என ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அம்மாநில குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரவு 8 மணிக்கு மேல் மதுவிற்பனையை நிறுத்துவது குறித்த ஆலோசனையில் நேற்று அதிகாரிகளுடன் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆலோசனைக்கு பின், மாநிலம் முழுவதும் இரவு 8 மணிக்கு மேல் மது விற்பனைக் கூடாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசின் இந்த உத்தரவை மீறி 8 மணிக்கு மேல் மது விற்பனை செய்தால் மதுக்கடைகள் மற்றும் பார்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதன் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின் அந்த உத்தரவு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் போலிமது விற்பனை, சட்டத்துக்கு புறம்பான மது விற்பனை, நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மது விற்பனை போன்ற குற்றச்சாட்டு வந்தால் கடுமையான சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments