Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாஸ்டேக் மூலம் இதுவரையிலான வசூல் எவ்வளவு? – அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:47 IST)
தேசிய நெடுஞ்சாலை சுங்கசாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் வசூலான தொகை குறித்து அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்க சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்க 2014ம் ஆண்டு ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் பலர் அதை பயன்படுத்தாததால் கடந்த 2021ம் ஆண்டு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் ஃபாஸ்டேக் மூலம் வசூலான தொகை குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த அமைச்சர் நிதின் கட்கரி “நாடு முழுவதும் 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை 4.59 கோடிக்கும் மேற்பட்ட ஃபாஸ்டேக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக்குகள் மூலம் இதுவரை 58,188.53 கோடி ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலாகியுள்ளது. 2020-ம் நிதியாண்டில் ஃபாஸ்டேக் மூலம் பெறப்பட்ட கட்டணம், 10,728.52 கோடி ரூபாயாக உள்ளது.

2021-2022 நிதியாண்டில் ஃபாஸ்டேக் மூலம் ரூ.26,622.93 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஃபாஸ்டேக் பயன்படுத்தும் 12.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து, தவறாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments