Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டை கிழிய கத்திய நிதியமைச்சர்; தூங்கி வழிந்த அமைச்சர்கள்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (20:42 IST)
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை குறித்து பேசியபோது அமைச்சர்கள் தூங்கி வழியும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

டெல்லியில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அமைச்சர்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொருளாதார மந்தநிலை நிலவுவது குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை ஏற்படவில்லை என்றும், வளர்ச்சி விகிதம் மட்டுமே குறைந்திருப்பதாகவும் விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் தூங்கி வழிந்து கொண்டிருந்தது கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது இந்த புகைப்படங்களை எதிர்க்கட்சி தொண்டர்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ‘தூங்கும் இந்திய பொருளாதாரம்’ என கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments