Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”மத்ததெல்லாம் ஒர்ஸ்ட்டு, இந்தியா தான் பெஸ்ட்”.. நிர்மலா சீதாராமன் புகழாரம்

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:40 IST)
முதலீட்டாளர்களுக்கு உலகிலேயே சிறந்த இடம் இந்தியா தான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் முதலீட்டாளர்களிடம் பேசிய, நிர்மலா சீதாராமன், ”முதலாளித்துவத்திற்கு மதிப்பளிக்கும் சூழல் இந்தியாவில் தான் உள்ளது, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீடிக்கும் இந்த சூழலிலும் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று” என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும், முதலீட்டாளர்களுக்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த இடம் வேறெதுவும் இல்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லையென பாஜகவினரை பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், தற்போது முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments