Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தூக்கு உறுதி: நிர்பயா கொலையாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (16:14 IST)
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என நீதிமன்றம் கடந்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு அளித்தது
 
ஆனால் இந்த தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் குற்றவாளிகள் நால்வரும் மாறி மாறி மனுக்களை தாக்கல் செய்து வந்ததால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது 
 
இந்த நிலையில் கடைசியாக மார்ச் 20ஆம் தேதி 4 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக குற்றவாளிகள் தரப்பில் இருந்தும், குற்றவாளிகளின் உறவினர்கள் தரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்படும் என்ற நிலை இருந்தது
 
இந்த நிலையில் டெல்லி நீதிமன்றம் சற்றுமுன் அளித்த தீர்ப்பில் நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட எந்தவித தடையுமில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் டெல்லி திகார் சிறையில் நாளை காலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்