Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுக்குள் வந்தது நிபா வைரஸ் பரவல்.. கட்டுப்பாடுகளை தளர்த்திய கேரள அரசு..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (09:43 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வந்த நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இருவர் பலியான நிலையில் ஒருசில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பொது இடங்களில் மாஸ்க் அணிவது, பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது என நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக புதிதாக நிபா வைரஸ் தொற்று யாருக்கும் பரவாத நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலும் தங்க முடியவில்லை, பாகிஸ்தானுக்குள் செல்லவும் அனுமதி இல்லை: 2 குழந்தைகளுடன் பெண் தவிப்பு..!

தீர்ப்பு கூட எழுத தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி: உயர்நீதிமன்ற நீதிபதியின் அதிரடி நடவடிக்கை..!

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு! யாருக்கு அந்த இலாகாக்கள்?

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அடுத்த கட்டுரையில்
Show comments