Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 குழந்தைகள் பெற்ற எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் பேச்சு..!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (20:52 IST)
மூன்று குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்ற எம்பிக்களை பகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் அஜித் பவார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாகவும் இதற்கு நாமே பொறுப்பு என்றும் தெரிவித்தார்.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கும் எம்பி மற்றும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஒரு குழந்தை மற்றும் இரண்டு குழந்தை பிறந்தவர்களுக்கு மட்டுமே அனைத்து பதவிகளையும் கொடுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments