Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தாண்டாமல் இருக்க மீனவர்களுக்கு புதிய கருவி: இஸ்ரோ சிவன்

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (00:27 IST)
சமீபத்தில் இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியை பொறுப்பேற்ற தமிழரான சிவன், அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியபோது நீண்டகாலமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதும், இலங்கை படையினர்களால் கைது செய்யப்படுவதுமாக இருந்து வரும் நிலையில் இதற்கு முடிவு கட்ட எல்லையை கண்டறியும் புதிய கருவி தயாரிக்கப்பட்டு மீனவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்து கைதாகும் பிரச்சனையிலிருந்து விடுபட நாவிக் (Navig) என்ற புதிய கருவி தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த கருவியின் மூலம் மீனவர்கள் தாங்கள் கடந்து கொண்டிருக்கும் பாதை, வானிலை மாற்றங்கள் ஆகியவற்றை தெளிவாக அறிய முடியும் என்றும் கூறினார்.

மேலும் இன்னும் ஒருசில மாதங்களில் ஜி-சேட் 11 செயற்கைகோள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வராமலே தொலைவிலிருந்து மருத்துவம் பார்க்க முடியும் என்றும், தொலைதூர கல்வி பயிலவும் முடியும் என்று தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments