Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்றத்தை அப்படியே தெனிந்தியாவுக்கு மாத்துங்க.... நவநீதகிருஷ்ணன் கோரிக்கை!!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (19:16 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் டெல்லியில் ஏற்படும் காற்று மாசு தொடர்பாக டெல்லி மேல் சபையில் குறுகிய நேர விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கனிமொழி, டி.ராஜா, நவநீதகிருஷ்ணன் பங்கேற்று பேசினர்.
 
அப்போது நவநீதகிருஷ்ணன் பின்வருமாறு பேசினார், டெல்லியில் ஒவ்வொரு வரும் வசிப்பதற்கு அச்சப்படுகிறார்கள். மனிதர்கள் நீண்ட காலம் உடல் தகுதியுடன் வசிக்க முடியாத அளவுக்கு இங்கு காற்றுமாசு உருவாகி வருகிறது. 
 
வாழ்ய்ம் இடத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. காற்று மாசுவை கட்டுப்படுத்த அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்க வேண்டும்.
 
பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பாராளுமன்ற கூட்டத்தை தென் இந்தியாவுக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன். இதனால் நமது வட இந்திய நண்பர்கள் காற்று மாசு இல்லாமல் நல்ல தட்ப வெப்ப நிலையை பெற இயலும் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments