Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக பாஜகவிலிருந்து 4 எம்.எல்.ஏக்கள்! – பிரதமர் மோடி தமிழில் நன்றி!

Webdunia
திங்கள், 3 மே 2021 (08:56 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தமிழில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது. எனினும் கூட்டணி கட்சியான பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றுள்ளது. 25 வருடங்களில் பாஜக எம்.எல்.ஏக்கள் முதன்முறையாக சட்டசபை செல்ல உள்ளனர்.

இந்நிலையில் தமிழக தேர்தல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments