மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

Siva
செவ்வாய், 15 ஜூலை 2025 (17:36 IST)
மும்பையில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்திற்கு  மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அந்த மின்னஞ்சல்  பினராயி விஜயன் பெயரில் வந்ததாக கூறப்படுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"தோழர் பினராயி விஜயன்" என்ற பெயரில் வந்த மின்னஞ்சலில், மும்பை பங்குச்சந்தையின் அலுவலக கட்டிடத்தில் நான்கு ஆர்.டி.எக்ஸ் மற்றும் ஐ.இ.டி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சரியாக மாலை 3 மணிக்கு வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களும் காவல்துறையினரும் பங்குச்சந்தை அலுவலகத்திற்கு சென்று சோதனை செய்தனர். 
 
ஆனால், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மின்னஞ்சல் அனுப்பிய அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 
ஏற்கனவே நேற்று டெல்லியில் இரண்டு சி.ஆர்.பி.எஃப்  பள்ளிகள் மற்றும் ஒரு கடற்படை குழந்தைகள் பள்ளி ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொகுதி மாறி போட்டியிடுகிறாரா சி.வி. சண்முகம்? என்ன காரணம்?

அதிமுக கூட்டணியில் தவெக சேர வேண்டுமானால் ஒரே ஒரு நிபந்தனை தான்: ஆர்வி உதயகுமார்

நாங்கள் கொடுத்ததை வாங்கி தின்ற மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: சி.பி.எம். நிர்வாகி சர்ச்சை பேச்சு..!

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்ட விதிமுறைகள் இல்லாதபோது, தி.மு.க. மட்டும் எப்படி கூட்டம் நடத்தியது? பாராளுமன்றத்தில் கேள்வி

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக திடீர் சரிவு.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments