Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டால் ஒரே நாளில் ரூ.3.6 லட்சம் கோடி நஷ்டம்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (08:14 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமையாக இருந்தபோதிலும் பட்ஜெட்டை முன்னிட்டு பங்குச்சந்தை இயங்கியது.
 
பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருந்தபோது மும்பை பங்கு சந்தை கிடுகிடுவென சரிந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் பங்கு சந்தை சரிவால் ரூ.3.6 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
பொதுவாக பட்ஜெட்டின் போது பங்குச்சந்தை உயரும் என்பதால் முதலீட்டாளர்கள் பட்ஜெட் தினத்தன்று புதிய பங்குகளை வாங்கி விற்பதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆனால் நேற்று பங்குச்சந்தை ஆரம்பித்த காலை 9 மணியில் இருந்தே பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தது முதலீட்டாள்ரகளை அதிர்ச்சி அடைய செய்தது.
 
ஆனால் அதே நேரத்தில் நேற்று பட்ஜெட் காரணமாக தங்கத்தில் விலை உயர்ந்தது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,376-க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments