Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’மத்திய பட்ஜெட்’ மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது - கமல்ஹாசன் ’டுவீட்’

’மத்திய பட்ஜெட்’ மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது - கமல்ஹாசன் ’டுவீட்’
, சனி, 1 பிப்ரவரி 2020 (16:23 IST)
இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமான், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, சுமார் இரண்டரை நேரமாக உரையாற்றினார். இது வரலாற்றில் நீண்ட நேர  உரையாக அமைந்துள்ளது. 
மத்திய அமைச்சரின் பட்ஜெட் தாக்கல் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு விமர்சங்களை முன் வைத்து வருகின்றனர்.
 
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது :
 
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.  நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்  காந்தி,  மத்திய நிதி அமைச்சர் ஆற்றிய உரை நீண்டதாக அமைந்திருந்தாலும் அது வெற்று உரை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் அன்பில் பொய்யாமொழிக்கு புதிய பதவி....