Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் மட்டும் இன்று ஒரே நாளில் 6923 பேருக்கு கொரோனா

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (20:49 IST)
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிகமாக கொரோனாபாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து அங்கு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று மும்பையில் மட்டும் 6923 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மும்பையில் 8 பேர் உயிரிழந்தனர் என்றும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,649 ஆக உயர்ந்துள்ளதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
மேலும் மும்பையில் மொத்தம் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, மகாராஷ்டிரா மாநிலத்தின் மற்றொரு முக்கிய நகரமான நாக்பூரில் இன்று மட்டும் 3970 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,479  பேர் குணமாகி வீடு திரும்பியதாகவும் 58 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments