Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாதம் சம்பளம் வரவில்லை. பிச்சை எடுக்க அனுமதி வேண்டும்: காவலரின் கடிதத்தால் பரபரப்பு

Webdunia
வியாழன், 10 மே 2018 (09:18 IST)
இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை என்பதால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும், அதனால் தனக்கு காவலர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி தரவேண்டும் என்றும் போலீஸ் கமிஷனருக்கு மும்பையை சேர்ந்த காவலர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையை சேர்ந்த தயானேஷ்வரர் என்ற கான்ஸ்டபிள், மகாராஷ்டிரா முதல்வருக்கும் போலீஸ் கமிஷனருக்கும் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
 
எனக்கு இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை. எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்கவும், வங்கியில் வாங்கிய லோனுக்கு பணம் கட்டவும் என்னிடம் பணம் இல்லை. சம்பளம் வராததால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே காவலர் உடையில் பிச்சை எடுக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தயானேஷ்வரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments