Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் மோடி!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (08:07 IST)
இந்திய பிரதமர் மோடி ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மீண்டும் ஆறாவது முறையாக மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் ஆலோசனை நட்த்த இருக்கிறார்.

இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 5 கட்டங்களாக மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன்பும் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மீண்டும் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 16ஆம் தேதி 3 மணி அளவில், பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், திரிபுரா, இமாச்சலப் பிரதேஷ், சண்டிகர், கோவா, மணிப்பூர், நாகாலாந்து, லடாக், புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம் , அந்தமான் & நிகோபார், தாரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, சிக்கிம், லட்சத்தீவு ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

அடுத்த நாளான ஜூன் 17ஆம் தேதி, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களான, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஆந்திர பிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments