பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

Senthil Velan
செவ்வாய், 21 மே 2024 (17:39 IST)
இந்து - முஸ்லிம் இடையே பிரச்சினைகளை தூண்டி, சமூகத்தில் வெறுப்புணர்வை வளர்த்து வரும் பிரதமர் நரேந்திர மோடி, பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
 
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில்,  தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்து, முஸ்லிம் மதத்தினரிடையே பிரச்சினைகளை தூண்டும் வகையில் பிரதமர் மோடி தினசரி வெறுப்பு உரையாற்றி வருகிறார் என தெரிவித்தார்.  

ஒருபுறம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி வருகிறார் என்றும் மறுபுறம், இந்து-முஸ்லிம் என பிரிவினையை தூண்டினால் பொது வாழ்க்கையில் இருக்க தனக்கு எந்த தகுதியும் இல்லை என கூறுகிறார் என்றும் தினமும் இதுபோன்ற விஷயங்களை  பொது வாழ்க்கையை விட்டு விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ALSO READ: தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!
 
குறைந்தபட்சம் அவர் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தன் தவறை ஒப்புக்கொள்ளவுமில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை என்றும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments