மைக்ரோசாஃப்ட் குளறுபடியால் இன்றும் விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

Mahendran
சனி, 20 ஜூலை 2024 (08:18 IST)
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் சாஃப்ட்வேரில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் பணிகள் முடங்கிய நிலையில் இன்று  2வது நாளாக விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இன்று தற்போது வரை 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேரம் தாமதமானதால் பயணிகள் அவதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இணையதள சேவை ஒரே சீராக கிடைக்காமல், விட்டுவிட்டு வருவதால், இன்றும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இன்று மதியத்திற்குள் முழுமையாக சீரடைந்து விடும் என்று நம்புகிறோம் என விமானநிலைய அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர்.

முன்னதாக நேற்று மைக்ரோசாப்ட் விண்டோஸ் குளறுபடி காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள், வங்கி சேவைகள், ஐடி அலுவலகங்கள் பணிகள் முடங்கியதாக தகவல் வெளியானது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் என்ன பிரச்சனை என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்ய மைக்ரோசாப்ட் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் இன்றுக்குள் நிலைமை முழுவதுமாக சரி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments