Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மட்டன் பீஸை லவட்டிய நாய்: துரத்தி சென்று வெட்டிய கறிக்கடைக்காரர்!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:43 IST)
மகாராஷ்டிராவில் கறிக்கடையில் இருந்து மட்டன் பீஸை தூக்கி சென்ற நாயை கறிக்கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள சந்த்ரபூர் பகுதியில் கறிக்கடை ஒன்று உள்ளது. அந்த பக்கமாக சென்ற தெரு நாய் ஒன்று வெட்டி வைத்திருந்த ஆட்டுக்கறியிலிருந்து ஒரு துண்டை கவ்விக் கொண்டு ஓடியுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கறிக்கடைக்காரர் நாயை துரத்தி சென்றிருக்கிறார். நாய் வேகமாக ஓடவே ஆத்திரமடைந்த கறிக்கடைக்காரர் நாய் மீது கத்தியை தூக்கி வீசியிருக்கிறார். கத்தி குத்தியதால் காயமடைந்த நாய் கறியை போட்டுவிட்டு அலறியபடியே ஓடியிருக்கிறது.

இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற, விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த கறிக்கடைக்காரர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் ட்யூட்டியில்..! அண்ணியிடம் சில்மிஷம் செய்த தம்பி!?- அண்ணி குடும்பத்தார் செய்த செயல்!

ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடுதாரரும், நாமினியும் உயிரிழப்பு.. யாருக்கு இழப்பீடு வழங்குவது?

சென்னையில் மெட்ரோ விபத்து.. L&T நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. 35 நிமிட பேச்சுக்கு பின் மீண்டும் டிரம்ப்..!

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை.. ஈரான் செய்த பாவத்தால் பழிவாங்கப்படுகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments