Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்தது காங்கிரஸ்.. வெற்றி மீது அவ்வளவு நம்பிக்கையா?

Mahendran
சனி, 1 ஜூன் 2024 (14:16 IST)
ஏழு கட்ட பாராளுமன்ற தேர்தல் இன்றுடன் நிறைவு பெறுவதை அடுத்து ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முடிவை அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அந்த கட்சியினர் 100 கிலோ லட்டு ஆர்டர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜித்தேந்திர பட்வாரி என்பவர் 100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம் மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 
 
இந்த முறை பாஜகவால் வெற்றியை கொண்டாட முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டர்களும் மக்கள் நலனுக்காக உழைத்திருக்கிறார்கள் என்றும் எனவே கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
மேலும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் மக்கள் அரசை மாற்றும் முடிவை எடுத்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து ஏமாற்றிய காதலன்.. பிறப்புறப்பை வெட்டி பழிதீர்த்த டாக்டர் காதலி..!

சர்ச்சைக்குள்ளான ராகுல் காந்தியின் பேச்சு! அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்ட சபாநாயகர்!

இந்தியா வெற்றியை கொண்டாடியபோது பட்டாசு வெடித்து பலியான சிறுவன்!

HIV இருப்பது தெரியாமல்.. நண்பனுக்கு மயக்க மருந்து கொடுத்து அனுபவித்த நண்பன்!

சென்னையில் இன்று வெளுக்கப் போகும் மழை.. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments