Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க தேசத்தவங்க ஒழுங்கா போயிடுங்க..இல்லன்னா கபர்தார்! – மும்பையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்!

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (13:21 IST)
வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் மும்பையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்தம் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மும்பையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய நவ நிர்மாண் சேனா என்ற அமைப்பு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு எதிராக பிப்ரவரி 9ம் தேதி பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ”வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் நீங்களாக வெளியேறி விடுங்கள். இல்லையெனில் நீங்க மராட்டிய நவ நிர்மாண் பாணியில் வெளியேற்றப்படுவீர்கள்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மும்பையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments