Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி ரூபாய் பரிசு!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:03 IST)
கேரளாவில் காசு கொடுக்காமல் கடனாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

கேரளாவின் கோடை கால லாட்டரி குலுக்கல் நேற்று நடைபெற்றது. அதில் சந்திரன் என்பவரின் லாட்டரி சீட்டுக்கு 6 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த லாட்டரியை சந்திரன் காசு கொடுத்து வாங்கவில்லையாம். வழக்கமாக அவர் ஸ்மிஜா என்ற பெண்ணிடம் லாட்டரிகளை வாங்குவது வழக்கம். ஆனால் இம்முறை குலுக்கல் அன்று காலை வரை அவர் லாட்டரி வாங்காததால் ஸ்மிஜா அவருக்கு போன் செய்து லாட்டரி வேண்டுமா எனக் கேட்டுள்ளார்.

சந்திரனும் ‘எனக்கு லாட்டரி எடுத்து வை. நான் பின்பு காசு கொடுக்கிறேன்’ என சொல்லியுள்ளார். உடனே ஸ்மிஜா அவருக்காக ஒரு லாட்டரியை எடுத்துக் வைத்து அதன் எண்ணை போட்டோ எடுத்து அவருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார். மதியக் குலுக்கலில் அந்த எண்ணுக்கு 6 கோடி ரூபாய் விழுந்துள்ளது. இதையடுத்து அவரிடம் அந்த லாட்டரி சீட்டைக் கொடுத்து பரிசு விழுந்ததை நேர்மையாக சொல்லியுள்ளார் ஸ்மிஜா.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments