Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் பேசிக்கொண்டே ஹீட்டரைப் பயன்படுத்திய நபர். நடந்த விபரீதம்..!

Mahendran
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (18:23 IST)
செல்போனில் பேசிக்கொண்டே ஹீட்டரை பயன்படுத்திய நபர் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மகேஷ் பாபு என்ற நபர் நேற்று தனது நாயை குளிப்பாட்டுவதற்காக ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட வைக்க முயன்றார். அப்போது மகேஷ் பாபுவுக்கு செல்போன் அழைப்பு வந்த நிலையில் ஒரு கையில் செல்போனை பேசிக்கொண்டே இன்னொரு கையில் ஹீட்டரை பயன்படுத்தினார்.

அப்போது மகேஷ்பாபு தவறுதலாக தண்ணீரில் கையை வைத்து விட்டார். இதனை அடுத்து அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் மகேஷ் பாபு மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து அவருடைய மனைவி அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செல்போனை பயன்படுத்திக் கொண்டே தவறுதலாக ஹீட்டரை தொடுவதற்கு பதிலாக தண்ணீரை தொட்டுவிட்டதால் பரிதாபமாக உயிர் போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments