Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேதாஜி பெயரில் புதிய பட்டாலியன்: முதல்வர் மம்தா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (17:52 IST)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் புதிய பட்டாலியன் அமைக்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தேர்தல் நெருங்க நெருங்க நேதாஜியின் பெயர் அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படும் என்பது தெரிந்ததே. சமீபத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் நேதாஜியின் பெயரை பயன்படுத்தி வருகின்றன என்பதும் அவரது பிறந்த நாளை அனைத்து கட்சிகளும் சிறப்பாக கொண்டாடின என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கொல்கத்தா காவல்துறையில் நேதாஜி என்ற பெயரில் புதிய பாட்டாலியன் பிரிவு உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே நேதாஜியை கவுரவப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மம்தா பானர்ஜி தற்போது மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசும் விரைவில் நேதாஜி பெயரில் ஒரு திட்டத்தை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments