Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் திறப்பு நாளன்று என்ன செய்ய போகிறார் மம்தா பானர்ஜி: அதிரடி அறிவிப்பு!

Siva
புதன், 17 ஜனவரி 2024 (07:15 IST)
ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் அறிவித்துள்ள நிலையில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அந்த அறிவிப்பில் ராமர் கோவில் திறப்பு விழாவான ஜனவரி 22ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.  மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹசரா முதல்  பூங்கா விளையாட்டு மைதானம் வரை இந்த நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்றும் இந்த பேரணி செல்லும் வழியில் உள்ள மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் வழிபாடு நடத்தப்படும் என்றும் இந்த பேரணிகள் கலந்து கொள்ள அனைத்து மக்களையும் வரவேற்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணியில் தனது கட்சியின் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் அறிவித்துள்ளார். ராமர் கோவில் திறப்பு விழா என்பது ஒரு அரசியல் விழாவாக மாறிவிட்டதாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அதே நாளில் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments