Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை கவர்னர் தமிழிசை ட்விட்டர் பக்கம் ஹேக்.. மீட்க போராடும் தொழில்நுட்ப வல்லுனர்கள்..!

Siva
புதன், 17 ஜனவரி 2024 (07:07 IST)
புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் சமூக வலைதளமான ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த கணக்கை மீட்க தொழில்நுட்ப வல்லுநர்கள் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
 தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துக்கள் மத்திய அரசின் நல திட்டங்களை அவர் பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறல்! 24 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கைது!
 
இந்த நிலையில் திடீரென அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்க முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஒரு மாநில கவர்னரின் ட்விட்டர் பக்கமே ஹேக் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் அவருடைய ட்விட்டர் கணக்கு மீட்கப்படும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments