Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா-சந்திரசேகரராவ் இன்று சந்திப்பு: 3வது அணிக்கு அச்சாரமா?

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (08:25 IST)
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சி புரிந்து வந்தாலும் பாஜக, சமீபகாலமாக இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த புதிய வியூகங்களை எதிர்க்கட்சியினர் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த தேர்தல்களில் டெபாசிட் இழப்பு உள்பட படுதோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியை இனியும் நம்பி பிரயோஜனமில்லை என்று முடிவு செய்த மாநில கட்சிகள், தேசிய அளவில் 3வது அணியை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் பேசியுள்ள நிலையில் இன்று இருவரும் நேரில் சந்திக்கவுள்ளனர்.

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் 3வது அணி குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்யவுள்ளனர் என்றும், இந்த சந்திப்பு 3வது அணிக்கு அச்சாரமாக அமையும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments