Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க முடியாத மோடி நாடகமாடுகிறார்: மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு!

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க முடியாத மோடி நாடகமாடுகிறார்: மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (12:29 IST)
இன்று முதல் தற்போது உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். அவற்றை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெறலாம் கூறப்பட்டது.


 
 
கருப்பு பணத்தை மீட்க, கள்ள பணத்தை தடுக்க அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை என பலரும் பாராட்டினாலும், இதற்கு எதிர்ப்பும் இருந்து வருகிறது. பொது மக்கள் தங்கள் அன்றாடு செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளார். அரக்கத்தனமான இந்த முடிவை உடனே திரும்ப பெற வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


 
 
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி அதனை மீட்க முடியாமல் போனதை திசை திருப்ப தற்போது நாடகமாடுகிறார். இந்திய மக்கள் மீது நிதி குழப்பம் மற்றும் பேரழிவை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.


 
 
இந்த அரக்கத்தனமான கடுமையான முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார் மம்தா பானர்ஜி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments