Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைக் கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (09:17 IST)
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டாக வெட்ட வேண்டும் என சர்ச்சைக் கருத்தை கூறிய மலையாள நடிகர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலினுள் உள்ளே செல்லலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்புகளையே தெரிவித்து வருகினறனர்.
 
இதுகுறித்து சமீபத்தில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி, சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
அவரின் இந்த சர்ச்சைக்கருத்து குறித்து புகார் அளிக்கப்பட்டதால், அவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். 
 
இந்நிலையில் நடிகர் துளசி தான் அவ்வாறு பேசியது தவறு என்றும் தான் கூறிய கருத்திற்கு என்னை மன்னித்து விடுங்கள் என்றும் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments