Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறைவு பெற்றது மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் நடை சாத்தப்படுவது எப்போது?

நிறைவு பெற்றது மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் நடை சாத்தப்படுவது எப்போது?
Mahendran
சனி, 18 ஜனவரி 2025 (10:43 IST)
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, வரும் 20ஆம் தேதி கோயில் நடை மூடப்படும் என்று சபரிமலை கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மண்டல பூஜை சீசன் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 26ஆம் தேதி நிறைவடைந்தது. அதன் பின்னர் மகர விளக்கு பூஜை டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இதனை தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி காலை பந்தளம் அரண்மனை பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பின் கோயில் நடை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி உடனடி முன்பதிவு செய்தும் கோவிலுக்கு வரலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்றும் நாளையும் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நாளை இரவு வழக்கமான பூஜை முடிந்தவுடன் நடை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments