Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளின் திருமணத்திற்கு சேர்த்த பணம்; ஆக்ஸிஜனுக்காக அளித்த விவசாயி!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:50 IST)
மத்திய பிரதேசத்தில் தனது மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தை விவசாயி ஒருவர் ஆக்ஸிஜன் இன்றி சிரமப்படுபவர்களுக்காக கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்தவர் சம்பலால் குர்ஜார். விவசாயியான இவர் தனது மகளின் திருமணத்திற்காக 2 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜனுக்காக சிரமப்படுவதை கண்ட அவர் மகளின் திருமணத்தை ஆடம்பரமின்றி நடத்தியதுடன், தான் சேர்த்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற நன்கொடையாக அளித்துள்ளார்.

சம்பலால் குர்ஜார் இந்த 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மயங் அகர்வாலிடம் அளித்துள்ளார். இதன் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும் எனக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments