Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்த ஆக்ஸிஜன்; கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! – ம.பியில் சோகம்!

National
Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:21 IST)
மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் குறைபாடால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவால் அதீத பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. மத்தியபிரதேசத்திற்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மகாராஷ்டிராவிலிருந்து இறக்குமதியாகி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சில பிரச்சினைகளால் மகாராஷ்டிராவிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற நான்கு பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோக சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆக்சிஜன் சிலிண்டர்களை தாமதமின்றி வழங்க மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் பேசியுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments