Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காட்டுமிராண்டித் தனத்துடன் அனுகிய பிரியதர்ஷன்: லிஸி பரபரப்பு குற்றச்சாட்டு

காட்டுமிராண்டித் தனத்துடன் அனுகிய பிரியதர்ஷன்: லிஸி பரபரப்பு குற்றச்சாட்டு
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (15:13 IST)
பிரியதர்ஷன் தன்னை காட்டுமிராண்டித் தனத்துடனேயே அனுகியதாக லிஸி தெரிவித்துள்ளார். இயக்குனர் பிரியதர்ஷனுடன் விவாகரத்து பெற்ற லிஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


 

இன்று பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகார்வபூர்வமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. நாங்கள் இருவரும் அதற்க்கான அதிகார்வபூர்வ படிவங்களில் கையெழுத்திட்டுவிட்டோம். விவாகரத்திற்க்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது. சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் - சுசேன், திலீப் - மஞ்சு, விஜய் - அமலா பால் ஆகியோ விவகாரத்திற்க்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன். அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்ததையே அளித்திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர். ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

சென்னை உயர்நீதி மன்றம் தலையீட்டு வரை என்னை கடுமையாக காட்டுமிராண்டி தனத்துடனேயே என்னை அணுகினர். எங்கள் விவகாரத்தே நான் எங்கள் வாழ்க்கை எப்படியொரு அருவருக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறைசாற்றியிருக்கும். என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன். இத்தருணத்தில் இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் எந்த வித எதிர்பார்ப்புமின்றி என்னுடன் இருந்த வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவாகரத்துக்கு சென்ற ரஜினி மகள் விவகாரம்: திரையுலகினர் அதிர்ச்சி!