Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் வசிக்கும் லாலு பிரசாத் யாதவ் மகள்.. மக்களவை தேர்தலில் போட்டியா?

Siva
செவ்வாய், 19 மார்ச் 2024 (08:58 IST)
தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகள் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது  பீகார் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். மற்றொரு மகன் தேஜ் பிரதாப் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதேபோல் நாலு பிரசாத் யாதவ் மகள் பிசா பாரதி ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார் 
 
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் நான்காவது மகள் ரோகிணி தற்போது சிங்கப்பூரில் இருக்கும் நிலையில் அவர் இந்தியா வரயிருப்பதாகவும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது 
 
சிங்கப்பூரில் டாக்டராக இருக்கும் 44 வயது ரோகிணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தை லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு சிறுநீரக தானம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் பீகாரில் உள்ள சரண் என்ற தொகுதியில் ரோகினி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளது ரோகிணி வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று கூறப்படுகிறது. பீகாரில் இந்தியா கூட்டணி ஓரளவு வலுவாக இருக்கும் நிலையில் லாலு பிரசாத் யாதவ் மகள் போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments