Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகமாக பரவும் நிபா வைரஸ்.. கோழிக்கோடு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (11:46 IST)
கேரளாவில் கோழிக்கோடு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கோழிக்கோடு பகுதியில் இதுவரை நான்கு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
குறிப்பாக கோழிக்கோடு பகுதிகளில் உள்ள ஏழு பஞ்சாயத்துகளில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகள் அங்கன்வாடிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
 
கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments