Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி சுற்றுலா பேருந்து பயங்கர விபத்து! மாணவர்கள் பரிதாப பலி! – கேரளாவில் சோகம்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (10:32 IST)
கேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற பேருந்து அரசு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு ஊட்டிக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலா பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள் உட்பட 51 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர்.

ALSO READ: ஒரே நாளில் 2,529 பேர் பாதிப்பு; 12 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்த பேருந்து பாலக்காடு – வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பேருந்தில் பலமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments